120 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டியது இந்தியா!

SHARE

இந்தியா இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா இங்கிலாந் இடையே கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் எடுத்தன

பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 272 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 60 ஓவர்களில் இந்த ரன்னை எட்ட வேண்டும் என்பதால் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்க ஆசைப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

51.5 ஓவர்களில் அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், பும்ரா 3 விக்கெட், இஷாந்த் 2 விக்கெட், ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்குகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் திடீர் ஒத்திவைப்பு

Admin

கப்பு முக்கியம் பிகிலே ..டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்களை வாழ்த்தி அனுப்பிய இந்தியா!

Admin

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : பதட்டத்தில் ஒலிம்பிக் போட்டி!

Admin

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: தோனி வழக்கு தள்ளிவைப்பு

Admin

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

ஒலிம்பிக் போட்டியினை மிரட்டும் கொரோனா.. அச்சத்தில் டோக்கியோ

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

நம்ம வீரர்கள் கொஞ்சம் பயந்துதான் போயிட்டாங்க: தினேஷ் கார்த்திக் விளக்கம்

Admin

Leave a Comment