Author: இரா.மன்னர் மன்னன்

மத்திய அரசு புதிதாக உருவாக்கிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது. அந்த விதிகளில், சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்த தவறான படங்கள் பரவுவதாக புகார் வந்தால், அடுத்த ஒரு நாளுக்குள் அவை நீக்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்து சமூக வலைத்தளங்கள் தெரிவிக்க வேண்டும், புகார்களை கவனித்து நடவடிக்கை எடுக்க என்றே தனி அதிகாரிகளை சமூக வலைத்தளங்கள் நியமிக்க வேண்டும், தவறான தகவல்களை நீக்குவதோடு அவற்றைப் பரப்பியவர்களையும் சமூக வலைத்தளங்கள்…

Read More

பூங்காவிற்குள் நுழைந்தவுடன் ஊஞ்சலில் அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம். கை நிறைய கலர் மிட்டாய்கள் வைத்திருக்கும் சிறுவனின் கொண்டாட்டத்திற்கு ஈடாக சொல்லியிருக்கலாம். ஆபூர்வ வைரங்கள் கண்டடைந்த வியாபாரியின் பெருமித பூரிப்பை முகத்தில் காட்டியிருக்கலாம். என்றைக்குமில்லாமல் பாதி பூக்களுடன் திரும்பி செல்லும் பூக்காரியின் மொத்த பூக்களையும் முழுவதையும் ஒருவனே சொன்ன விலைக்கு பேரம் பேசாமல் வாங்கிக் கொண்டால், அந்த திகைப்பும் நிம்மதியும் கலந்த மகிழ்ச்சி என்றும் சொல்லியிருப்பேன் . வயதானவர்கள் தங்கள் வாழ்வின் நினைவலைகளை காற்றிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த தனிமையின் வெறுமை சில சமயம் யாரோ ஒரு தோழமையால் நிரம்பி விடும்போது நிலவைக் கண்ட குழந்தை போல் குதூகலமாகிறது. நான் முதுமையடையும் போது மட்டுமே இதை ஒப்பிட்டு சொல்ல முடியும். பதின்பருவ இளைஞனுக்கு தனது முதல் காதலியின் முதல் பார்வை, முதல் குரல், முதல் ஸ்பரிசம் , முதல் முத்தம் தந்த இரசாயன வெடிப்பின் தெறிப்பு போலிருந்தது என்றும்…

Read More

மானுட வாழ்க்கையே இணைந்து வாழ்வது தான். கூடுவதே அமைப்பாதலின் தொடக்கநிலை. மனித சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் அமைப்புகளை உருவாக்கி அவ்வமைப்புகளோடு ஒன்றிணைந்து அமைப்புகளாலேயே இயங்குகிறது. மனிதன் – குடும்பம் – சமூகம் – சாதி – மதம் – இனம் – பொருளாதாரம் – அரசு என நாகரீகத்தின் ஒவ்வொரு படிநிலைகளிலும் அமைப்புகள் பரிணமிக்கின்றன. ஆயினும் அமைப்பாதல் அனைவருக்கும் சாத்தியமில்லை. எளியவர் பிரிந்து நிற்க வலியவர்கள் ஒன்றிணைந்து சுரண்டுவதே இதுவரை உலக வரலாறாக தொடர்கிறது. அதிகாரத்தை வென்றெடுக்க ஒடுக்குமுறையை எதிர்கொள்ள எளியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம். ஆனால் எவ்வாறு போராடுவது? எப்படி போராடுவது? மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது எப்படி? எத்தகைய அமைப்பாய்த் திரள்வது? ஏன் நாம் அமைப்பாய்த் திரளவேண்டும்? நாம் அமைப்பாய்த் திரள்வதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? அமைப்பாய்த் திரண்ட பின் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய செயல்திட்டங்கள் என்னென்ன? நம்முடைய இலக்கு என்ன?…

Read More

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கே.எஸ்.ஷ்ரவந்தி நாயுடு-வின் பெற்றோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனது தாயின் மருத்துவ செலவுக்காக ஷ்ரவந்தி ரூ.16 லட்சம் வரை செலவு செய்துள்ளார். மேற்கொண்டு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் ஷ்ரவந்தி தவித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிசிசிஐ-யின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.வித்யா யாதவ் ட்விட்டர் பக்கத்தில் ஷ்ரவந்தி நாயுடுவின் தாயாரின் நிலை குறித்து பதிவிட்டு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த பதிவின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீர் விராட் கோலி சிகிச்சைக்காக ரூ.6.77 லட்சம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கெளசல்யா அருண்

Read More

பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், “பிரான்ஸில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு சிறப்பாகச் செயல்பட்டதன் விளைவாக நாட்டில் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸில் தொற்று காரணமான, பலி எண்ணிக்கை குறைந்துள்ளதால் பொது இடங்களில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுபான விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெளசல்யா அருண்

Read More

மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார். மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியடைந்தாா். இருப்பினும், மம்தா பானா்ஜியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுத்தனா். அதனடிப்படையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் எதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டும் முதலமைச்சராக தொடர முடியும் என்பதால், 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் மம்தா போட்டியிட்டு வென்ற பவானிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோவந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதால் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கெளசல்யா…

Read More

வங்கக்கடலில் புயல் உருவாகவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மே 24ஆம் தேதி புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே மே 26ஆம் தேதி கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், வங்கக்கடல் கரையோர உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், வானிலை ஆய்வு மையத்தில் அறிவிப்புகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். கெளசல்யா அருண்

Read More

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப்…

Read More

இந்தியாவில் பல்லாயிரம் மரங்கள் பாதுகாக்கப்படவும், பலநூறு ஆதிவாசி இனங்கள் இன்னும் உயிர்த்திருக்கவும் காரணமான சூழலியல் போராளி சுந்தர்லால் பகுகுணா தனது 94ஆவது வயதில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இன்று மறைந்திருக்கிறார். 1927ல் உத்திரகாண்ட் மாநிலத்தில் பிறந்து, இள வயதில் காந்தியடிகளைப் பின்பற்றிய பகுகுணா 1974ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் சில ஆதிவாசிப் பெண்கள் நடத்திய சிப்கோ போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். சிப்கோ என்ற சொல்லுக்கு ஒட்டிக் கொள்ளுதல் என்பது பொருள். உத்தரகாண்ட் மாநிலத்தின் காட்டுப்பகுதிகளில் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மரங்களை வெட்டிக் கொள்ள அன்றைய காங்கிரஸ் அரசு சில தனியாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தடுக்க உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் அந்த மரங்களைக் கட்டிப் பிடித்து ஒட்டி நின்றனர். எங்களை வெட்டிய பின்பு மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்றனர். கோடாரிகள் ஓங்கப்பட்டபோதும் அவர்கள் கலங்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. இப்படியாகத்தான் உருவானது சிப்கோ போராட்டம். முன்னதாக 1730ஆம்…

Read More

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் தரப்படும் என்றும் சிவ்ராஜ் சிங் சவுகான் ஏற்கணவே அறிவித்திருந்தார். இந்நிலையில் மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை மத்தியப்பிரதேசத்தில் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கெளசல்யா அருண்

Read More