- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரையில் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என காஞ்சிரக்கோடு எம்.எல்.ஏ பிரின்ஸ் ரயில்வேத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த தெற்கு ரயில்வே, மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது என்றும், இதற்கு இடைப்பட்ட தூரமானது 10 கிலோ மீட்டர் மட்டுமே என்ற நிலையில் கூடுதல் ரயில் நிலையம் வழங்குவதற்கான தேவையில்லை. இருப்பினும் ரயில்கள் நின்று செல்ல பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி பெற்றதாக மார்க் ஷீட் ஒன்று வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அது வெளியிடப்பட்ட நிலையில், ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த மார்க் ஷீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடத்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பொறியியல் துறையின் தகுதிப்பட்டியலில் இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இந்திய ஆடும் அணியில் ஜடேஜாவை சேர்த்தது தவறு என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் கடும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியா 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி முதலிலேயே தவறு செய்துவிட்டது. மேலும் டாஸ் போடுவதற்கு ஒருநாள் தாமதமாகியும் அணியை மாற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரவீந்திர ஜடேஜாவை இவர்கள் இடக்கை சுழற்பந்துவீச்சுக்காக அணியில் எடுக்கவில்லை. அவரை பேட்டிங்கிற்காக எடுத்தார்கள் அதுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாதற்போது 85 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஆல்பா, 170 நாடுகளிலும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் பீட்டா, 119 நாடுகளிலும், பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் காமா, 71 நாடுகளிலும் பரவி உள்ளது. இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் 11 நாடுகள் கடந்த 2 வாரங்களுக்குள் டெல்டா கொரோனாவைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாதவரம் காவல் நிலையம் காவல் உதவி ஆய்வாளர் சதீசை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் தொல்லைக்கு உதவியதாக சிறுமியின் தாய் , பெரியம்மாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எஸ்.ஐ.சதீஷ்க்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தை புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ.சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதவரம் பால்பண்ணை அருகே வசிக்கும் ரேவதி என்பவருடன் எஸ்ஐ சதீஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த பழக்கத்தின் காரணமாக காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் ரேவதியின் மகளுக்கு…
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை அவசர ஆலோசனை நடத்தப்படவுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என…
ஸ்விகியில் ஆர்டர் செய்த நடிகை நிவேதா.. உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார்! உணவகத்திற்கு தற்காலிகத் தடை
ஸ்விகி செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிர் புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு அதிர்ச்சி தகவலை தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார். அதன்படி அவர், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி செயலி மூலம் Moonlight takeaway உணவகத்தில் ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அந்த ஹோட்டல் மீது புகைப்படத்துடன் ஸ்விகி இந்தியாவை டேக் செய்து புகார் அளித்துள்ளார். மேலும் Moonlight takeaway உணவகத்தை ஸ்விகி செயலியிலிருந்து நீக்கவும் நடிகை கோரிக்கை விடுத்துள்ளார்.…
ஊரடங்கு தளர்வு நடவடிக்கையாக நாளை முதல் சென்னையின் புறநகர் ரயில் சேவை மீண்டும் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து மாநில அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமிழகத்தில் புறநகர் ரயில் சேவையானது ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து தமிழகத்தில் படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதன்படி, நாளை முதல் சென்னை எல்லைக்குட்பட்ட புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக டெல்டா பிளஸ் கொரோனா வகைக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உஜ்ஜைனில் உயிரிழந்த பெண் கொரோனா நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் அவர் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி உயிரிழந்தார். இவரைத் தவிர மத்தியப் பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்ட 4 பேரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,
‘’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல் மறந்துட்டு பேசாதீங்க ’’ – எடப்பாடிக்கு பதில் கொடுத்த ஸ்டாலின் !
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை பழனிசாமி தனது பணிகள் செய்ய மறந்துவிட்டார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த வரவு செலவு தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பேசிய முதலவர் மு.க.ஸ்டாலின் மார்ச் மாதம் தொடங்கி மேஆம் 2 தேதி வரை தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு அ.தி.மு.க. அரசே காரணம் என கூறினார். மேலும், பிப்ரவரி 26 முதல் மே 6-ந் தேதி வரை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு மறந்துவிட்டதா? கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருந்துவிட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல் எடப்பாடி…