இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

SHARE

மத்திய அரசு புதிதாக உருவாக்கிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லி

சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது. 

அந்த விதிகளில், சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்த தவறான படங்கள் பரவுவதாக புகார் வந்தால், அடுத்த ஒரு நாளுக்குள் அவை நீக்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்து சமூக வலைத்தளங்கள் தெரிவிக்க வேண்டும், புகார்களை கவனித்து நடவடிக்கை எடுக்க என்றே தனி அதிகாரிகளை சமூக வலைத்தளங்கள் நியமிக்க வேண்டும், தவறான தகவல்களை நீக்குவதோடு அவற்றைப் பரப்பியவர்களையும் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்க வேண்டும், சமூக வலைத்தளங்கள் மூலம் குற்றத்தில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், அரசு அல்லது நீதித்துறை கேட்கும் தகவல்களை சமூக வலைத்தளங்கள் கொடுக்க வேண்டும், ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் – என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்தியாவைச் சேர்ந்த கூ உள்ளிட்ட ஒருசில செயலிகள் மத்திய அரசின் புதிய சமூக ஊடக வழிகாட்டுதலுக்கு இணங்குவதாக தெரிவித்தன. ஆனால் பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விதிகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தன.  அந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இந்த சமூகவலைத்தளங்கள் இதுகுறித்து இன்று வரை உரிய பதிலளிக்கவில்லை. 

இதனால் அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் நாளை முதல் சமூக வலைத்தளங்கள் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் அரசுகளும் சமூக வலைத்தளங்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சுமூகமான முறையில், இருவருக்கும் பாதிப்பில்லாத வகையிலும் விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கோவின் செயலி ஹேக் செய்யப்பட்டதா..? மத்திய அரசு விளக்கம்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

வாரிசுக்கு மாறிய HCL சேர்மன் பதவியில் இருந்து விலகினார் ஷிவ் நாடார்!

Admin

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Admin

75 வாரங்களுக்கு சுதந்திர தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

Leave a Comment