வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

SHARE

வீட்டிலேயே கொரோனா தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்து உள்ளது.

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில், பரிசோதனைகளை அதிகரிப்பதும் முக்கிய பணி ஆகும். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் சங்கிலி உடைபடும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே பரிசோதனைக்கு மத்திய-மாநில அரசுகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை சுயமாக வீட்டிலேயே கண்டறிவதற்கான கருவி ஒன்றை புனேவை மையமாக கொண்டு செயல்படும் மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் லிட். நிறுவனம் தயாரித்து உள்ளது.

‘கோவிசெல்ப் கிட்’ எனப்படும் இந்த ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் (ஆர்.ஏ.டி.) கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஒப்புதல் அளித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த கருவியை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதன் விலை சுமார் ரூ.450 எனவும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

மேலும், இந்த கருவியை பயன்படுத்தும் முறை குறித்தும் ஐ.சி.எம்.ஆர். சில வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

மகாராஷ்ட்ராவில் தொடங்கியது கொரோனா 3வது அலை… அரசின் அறிவிப்பால் மக்கள் பீதி

Admin

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

ஏப்ரல் 19 வேண்டாம்… தேதியை மாத்துங்க – தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Admin

தெலங்கானா பெண் எம்.எல்.ஏ. விபத்தில் பலி… 10 நாட்களில் 2ஆவது விபத்து

Pamban Mu Prasanth

வருமானவரி செலுத்த முடியவில்லை… வட்டிமேல் வட்டி போடுகிறார்கள் – கங்கனா ரனாவத் வேதனை

Admin

மருத்துவரின் உயிரை காக்க ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

Leave a Comment