மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

SHARE

தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டுவிட்டரில் நடிகர் மாதவன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி ’ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி, நடித்து உள்ளார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்காகப் பலரும் நடிகர் மாதவனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் கணக்கில் ரசிகர்களுக்கு பதில் அளித்த மாதவன், வழக்கமாக தனிப்பட்டமுறையில் நன்றி சொல்லும் தன்னால் இப்போது அப்படிச் செய்ய இயலவில்லை என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி மாலை தனது குடும்பத்தில் உள்ள 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தியத் திரையுலகில் அமீர்கான், ரன்பீர்கபூர், சூர்யா உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு ஆளான நிலையில், மாதவனின் இந்தப் பதிவு திரைப்பட ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

இன்று திட்டமிட்டபடி நீட் தேர்வு..நாளை நீட்டுக்கு எதிராக தீர்மானம்…

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

Leave a Comment