நம்மைத் தேடிவரும் உயர்ந்த மனிதர்கள்: வாரியார் வாக்கு

SHARE

உயர்ந்த மனிதர்களை நாம்தான் எப்போதும் தேடிப் போகவேண்டும் என்பது இல்லை. சில நேரங்களில் உயர்ந்த மனிதர்கள் நம்மைத் தேடியும் வருவார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு மதிக்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

சில நேரங்களில் குணத்திலும் பண்பிலும் சிறியவர்கள் நமக்கு எட்டாத தொலைவில் இருப்பார்கள், அவர்களை நாமே போய் சந்திக்க வேண்டிய தேவை இருக்கும். இதை மட்டுமே வைத்து அந்த சிறியவர்களை நாம் பெரியவர்கள் என நம்பிவிடக் கூடாது. 

எத்தனை நபர்களைத் தானே போய் பார்த்தாலும் பெரியவர்களுக்கு அதனால் இழிவும் கிடையாது, எத்தனை பேர் சிறியவர்களை வந்து சந்தித்தாலும் அதனால் சிறியவர்களுக்கு சிறப்பும் கிடையாது.

இதற்கு நமது வாழ்க்கையிலேயே ஒரு உதாரணம் இருக்கிறது. நமது வயிற்றுக்கு நன்மை செய்யும் பால், மோர், தயிர் எல்லாம் நமது தெருவுக்கு வந்து விற்கப்படுகின்ரன. அவையே நம்மை வந்தும் அடைகின்றன. இதனால் அவற்றின் பெருமை குறைந்துவிட்டதா?

கள்ளானது அது இருக்கும் இடத்திலேயே விலை போகிறது. அதனால் அது பெருமைதான் பெற்றுவிட்டதா? – ஒரு மேடையிலே வாரியார் சொன்னது.

  • சுடரொளி

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உணவு எடுத்துக் கொள்ளுதலின் 4 வகைகள்: கீதை சொல்வது என்ன?

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

கர்ணன் – என்ற பெயர் எப்படி வந்தது?

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

நோய், பிணி – இரண்டு சொற்களுக்கும் என்ன வேறுபாடு?

சீல் வைக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறை… சொந்தம் கொண்டாடிய நித்யானந்தா

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அங்கு கிருஷ்ணன் கோயிலே கிடையாது… கடலுக்கடியில் மோடி செய்தவை எல்லாம் தேர்தல் ஸ்டண்ட்டா?

Pamban Mu Prasanth

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment