4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

SHARE

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26 அன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோவால் வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

தமிழகத்துக்கான தேர்தல் அட்டவணை தேர்தல் அறிவிக்கை மார்ச் 12, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 , வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20, வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22, வாக்குப்பதிவு ஏப்ரல் 6 என வடிவமைக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் மறைவு காரணமாக காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையின்படி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இத்தோடு 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு 3 கட்டமாகவும், 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவுக்கு ஒரே கட்டமாகவும், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களின்போது 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 824 தொகுதிகளைச் சேர்ந்த 18 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் 2 கோடியே 70 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.

நமது செய்தியாளர்

#தேர்தல் #தமிழகம் #4மாநிலத்தேர்தல்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

COWIN இணையத்தில் தமிழ் மொழி சேர்ப்பு..! ஆனாலும் 12ஆம் இடம்தான்!.

Admin

9 – 11ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம்

Admin

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

சென்னையில் சதமடித்தது பெட்ரோல் விலை… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்திற்கு 4,000 ரசிகர்களுக்கு அனுமதி

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண உதவி : தமிழக அரசு

Admin

Leave a Comment