கேரள முதல்வராக 2ஆவது முறையாக பினராயி விஜயன் , வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்.
கடந்த மே மாதம் 2ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் கேரளாவில் வெளியான நிலையில் முதல்வராக அறிவிக்கப்பட்ட பினராயி விஜயன் இன்றுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று கூடிய இதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20 ஆம் தேதி பினராயி வியஜன் முதலமைச்சராக பதவியேற்பார் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் 18 நாட்களுக்கு பிறகு பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கெளசல்யா அருண்