Author: Nagappan

Endless Smile VST Crack சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டியில் கடந்த 08.05.2022-ல் “செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்” தொடங்கப்பட்டது. தொடங்கியவர் கண்டவராயன்பட்டியை சேர்ந்த S.L.S.பழனியப்பன். இவர் சிறு வயது முதலே பொதுநலத் தொண்டாற்றி வருபவர். தமிழ் வரலாற்றிலும், பழமையிலும், நாட்டுக்கோட்டை நகரத்தார்(செட்டியார்) வரலாறு மற்றும் வாழ்வியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரிய பொருட்களை பேணிக்காத்து மக்களுக்கு காட்சிபடுத்துவதே அருங்காட்சியகம். அந்த வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கணக்கு ஓலைச்சுவடிகள், பழைய கணக்கு புத்தகங்கள், தமிழ் எண்களுடன் கூடிய பழைய பேரேடுகள், நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமண சீர் வரிசைப் பொருட்கள்,கலைப் பொருட்கள், பழைய திருமண பத்திரிகைகள், பழைய முத்திரைத்தாள்கள், பத்திரங்கள், கடிதங்கள், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மண்பாண்டங்கள், ஆச்சிமாரின் கைவினைப் பொருட்கள், அரிய புகைப்படங்கள், சுதந்திரத்திற்கு முன்பு முதல் தற்போது வரை உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய்…

Read More

ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்று அமித் ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது, இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிற மொழிகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சு இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிப்பதற்கான முகாந்திரமாக இருப்பதாக விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாகக் கூறுகையில், “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து…

Read More

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம்–ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்ததாகவும், தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்றும், சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு…

Read More