Author: இரா.மன்னர் மன்னன்

மணிப்பூரில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதைத் தடுக்க ஆம்புலன்சுகளில் சைரனை ஒலிக்கவிட வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை தாக்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைவதுடன் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன நெரிசலும் இல்லை. எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்களில் சைரனை இனி ஒலிக்கவிட வேண்டாம் எனவும் சாலைகள் மூடப்பட்டிருந்தாலோ அல்லது வாகன நெரிசல் இருந்தால் மட்டுமே சைரனை ஒலிக்கவிட வேண்டும்” என அம்மாநில அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,683 ஆக அதிகரித்துள்ளது மேலும் 612 பேர் உயிரிழந்துள்ளனர். கெளசல்யா அருண்

Read More

கொரோனா தடுப்பூசியை வீணாக்குவது உயிரை கொல்லுவதற்கு சமமானது எனவே தடுப்பூசியை வீணாக்காதீர்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் களப்பணியில் உள்ள அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பிரதமர். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும்போதுகூட, மாநிலங்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தடுப்பூசி வீணடிக்கப்படுவது ஒரு பிரச்சனையாக உள்ளது என கூறிய அவர் ஒரு டோஸ் வீணாக்கினாலும், அது ஒரு உயிரை பாதுகாக்கும் கேடயத்தை கொடுக்க முடியாமல் போவதாகும். எனவே, தடுப்பூசி வீணாவதை நிறுத்த வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். அதே நேரம், உள்நாட்டில் உற்பத்தியான தடுப்பூசிகளை பிரதமர் வெளிநாடுகளுக்கு விற்ரது தொடர்பான கேள்விகளைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த…

Read More

கரும்பூஞ்சை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என இது குறித்து விளக்கிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கரும்பூஞ்சைத் தொற்று குறித்து ஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இது புதுவாக உருவான தொற்று பாதிப்பு அல்ல எனவும் தமிழகத்தில் 9 பேர் இதுவரை கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கரும்பூஞ்சைத் தொற்றால் தமிழகத்தில் யாரும் இறப்பைச் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கருப்பு பூஞ்சைகள் குறித்த வாட்ஸ் ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நோய் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என கூறியுள்ள அவர் கரும்பூஞ்சை பாதிப்பை கண்டு ஆராய குழு அமைக்கப் பட்டுள்ளதாகவும், கரும்பூஞ்சைத் தொற்று ’தகவல் அளிக்கப்பட வேண்டிய…

Read More

வெளிநாட்டில்  மருத்துவம் படித்து பணிக்காக காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்தி தமிழகத்தில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்ற பின்பே மருத்துவ பணி தொடர வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை காரணமாக இந்த 2 விதிகளையும் தளர்த்தி தற்போது வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என தமிழக  அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.- கெளசல்யா அருண்

Read More

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.  சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இந்த சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது இதனை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரும் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா எனக் கேட்டறிந்தார்.- கெளசல்யா அருண்

Read More

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியைத் தழுவியது. ஒரு இடத்தைக் கூட அதனால் பெற இயலவில்லை. இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளில் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் முதல் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா வரை பலரும் கட்சியை விட்டு வெளியேறினர். இந்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரனும் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்து உள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் அடிப்படை அமைப்பே உருக்குலைந்து உள்ளது. நமது நிருபர்.

Read More

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200 – லிருந்து ரூ. 900- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் ரூ. 800-லிருந்து ரூ. 550 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. குழுவாக சென்று பரிசோதனை மேற்கொண்டால் ரூ.400 மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், வீட்டிற்குச் சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக ரூ. 300 வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெளசல்யா அருண்

Read More

கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் அமைத்துள்ள ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மைய தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டன.

Read More

தமிழ்ச்சமூகம் ஓர் இருண்ட காலத்தில் உழன்று கொண்டிருக்கிறது. வாழ்ந்து செழித்த இனம் தற்போது அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு வருகின்றது. ஓர் தேசிய இனம் தன்னுடைய மொழியின் மீதான இறைமையை இழந்து, தன்னுடைய வரலாற்றையும் மரபறிவையும் மறந்து, தன் நிலத்தின் மீதான அதிகாரத்தை துறந்து, நாடின்றி அகதியாக அநாதையாக வாழும் காலத்தை ‘தேசிய இனத்தின் வீழ்ச்சிப் படலம்’ எனலாம். அத்தகைய வீழ்ச்சிப் படலத்தை நோக்கி அறிந்தோ அறியாமையிலோ ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்நிலையில் வீழ்ச்சிப் படலத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள சீழ்பிடித்த நமது அறிவையும் பண்பாட்டையும் சீரமைத்து ஓர் ஒளிமயமான மறுமலர்ச்சி காலத்தை நோக்கி முன்னகர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் அத்தகைய மறுமலர்ச்சி காலத்திற்கான ஓர் தொடக்கமாக விளங்கியது தான் இடிந்தகரை போராட்டம். உண்மையில் அது இடிந்தகரை அல்ல தமிழினம் எழுந்தகரை என்பது தான் சாலப்பொருத்தம். தமிழ்த்தேசிய இனம் தன் மொழியை காக்க மொழிப்போர் நடத்தியது போல் தன்…

Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோவால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றர். மேலும் கொரோனா காரணமாக சில குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் இருவரையுமே இழந்து தவிக்கும் அவலமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெற்றோரை இழந்து தவிக்கும் பராமரிக்க யாருமில்லாத குழந்தைகளை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது கெளசல்யா அருண்

Read More