- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இலங்கை அணியில் புதிய கேப்டன் ஷனகா தலைமையில் போதிய அனுபவம் இல்லாத வீரர்கள் அதிக அளவில் உள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணி வெற்றியோடு தொடரை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இவ்விரு அணிகளும் இதுவரை 159 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 91ல் இந்தியாவும், 56ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. எஞ்சிய 11 ஆட்டங்களில்…
சென்னை மாநகர காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 22 ஆவின் நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக ஆவினின் விஜிலென்ஸ் பிரிவுக்கு சிலர் ரகசிய தகவலையும் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், விசாரணை நேர்மையாக நடைபெற்றால் ஏராளமான அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் எச். ஜெயலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் ஆவின்பிரிவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
தன்னுடன் சேர்ந்து வளர்ந்த ஆட்டை பிரிய மனமில்லாமல் நாய் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் விவசாயி ஒருவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் வளர்த்து வந்துள்ளார். அதோடு சேர்த்து நாயை ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளுடன் நாய் நட்பாக பழகி ஒன்றாக சேர்ந்து வளர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்த விவசாயி, ஆடுகளை விற்றுள்ளார். அப்போது ஆடுகளை லாரியில் எடுத்து செல்லும் போது, ஆடுகளை பிரிய மனமில்லாத நாய், அந்த லாரியை பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பின் தொடர்ந்துள்ளது. ஆடுகளை பிரிய மனமில்லாமல் நாய் நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய நாட்டிற்கு என்று தனியாக தேசியமொழி எதுவும் கிடையாது என்று மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, யானைகள் மீது ரயில்கள் மோதல் தொடர்பாக ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சில வட மாநிலங்களின் ரயில்வே கோட்ட அதிகாரிகள் இந்தியில் பதில் அளித்திருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மத்திய அரசின் அலுவல் மொழிகள் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்திய மொழிகள் சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியாவிற்கு என தேசிய மொழி எதுவும் கிடையாது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினால், எந்த மொழியில் பதிலளிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அதிகாரி இந்தியில் பதிலளித்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது என்றும், அலுவல்மொழி விதிகள் 1976 தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது…
சுமார் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து நடிகர் சோனு சூட்டை காண மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு ரசிகர் ஒருவர் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான சோனு சூட் கடந்தாண்டு முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனால் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.பல ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கி.மீ. சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை வரவேற்ற சோனு சூட் அவருக்கு புது செருப்பு வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளதை ரசிகர்கள் பலரும் நெகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமர் மோடி பாராட்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா 3வது அலைக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பரவலை கட்டுபடுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளது. மேலும் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கூடுதல் தொகுப்பாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமரே பாராட்டி உள்ளதாக அவர் கூறினார்.
மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அணை கட்ட அனுமதி வேண்டுமென கர்நாடக முதல்வர் எயூரப்பா நேற்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டு கால நிறைவு பெற்றதை முன்னிட்டு பிரதமர் மோடியை முதல்வர் எயூரப்பா சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமரிடன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டி பிரதமர் மோடியிடம் கோரியதாக தெரிவித்தார்.
நூலிழை வித்தியாசத்தில் ஒருவர் உயிர் தப்புவது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் இரு பெண்கள் தங்களுடைய வாழ்வில் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியுள்ளனர். ரஷ்யாவின் டாகெஸ்டான் பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதியில் காஸ்பியன் கடலுக்கு மேல் ஒரு இடம் உள்ளது. இந்த இடம் ரஷ்யாவில் மிகவும் பிரசித்தி சுற்றுலா இடம். இந்த இடத்தில் வருபவர்கள் 6300 அடி உயரத்தில் இருந்து காஸ்பியன் கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த உயர்மான இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஊஞ்சல் வைத்து சிலர் ஆடியுள்ளனர். அந்த சமையத்தில் இரு பெண்கள் இந்த ஊஞ்சலில் ஏறி ஆடியுள்ளனர். பின்னே இருந்து ஒருவர் அந்த ஊஞ்சலை தள்ளிவிட்டு வந்துள்ளார். திடீரென அந்த ஊஞ்சலின் கயிறு எதிர்பாராத விதமாக அறுந்து உள்ளது. அப்போது ஊஞ்சலில் இருந்த இரண்டு பெண்களும் கீழே விழுந்துள்ளனர். இவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு இருந்த…
ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை நிறுவனமானது ரிலையன்ஸ் ரீடெய்ல். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வர்த்தகத்தை தொடர்ந்து பல துறைகளில் விரிவாக்கம் செய்து வருகிறார் முகேஷ் அம்பானி. அதன் ஒரு பகுதியாக லோக்கல் சர்ச் இன்ஜின் மற்றும் விற்பனையாளர்கள் டேட்டாபேஸ் நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சுமார் 3 ஆயிரத்து 947 கோடி மதிப்பிலான, 40.95% பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் வாங்கியுள்ளது. மேலும் 26 சதவீத பங்குகளை நிறுவன கைப்பற்றல் விதிகள் கீழ் செபி ஒப்புதல் அளித்த பின் வாங்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் ரீடைல் தரப்பில் தெரிவித்துள்ளது.
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபா மீதான வழக்கு தொடர்பாக அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு எடுத்த நிலையில் அவர்கள் தப்பியோடியது தெரியவந்துள்ளது . பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா. முன்னாள் மாணவிகள் 18 பேர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் அவர் மீது 3 போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் . இந்த நிலையில் சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது . வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகள் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்ட நிலையில் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவெடுத்தது.அதன்படி சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது அவருக்கு ஆதரவான 5 ஆசிரியர்கள் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியதாக தெரியவந்துள்ளது .