- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரிட்டன் நாட்டில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நிலையில்பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆகவே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பணியில் இல்லாதபோது தனிமைபடுத்தி கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சேலத்தில், மகளிருக்கான இலவச பயணச் சீட்டை, வடமாநில பயணிகளுக்கு கொடுத்து மோசடி செய்த பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக, கட்டணம் இல்லாமல், மகளிர் என அச்சிடப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம் ரயில்நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் அரசு பேருந்தில், வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர். பேருந்து ஐந்துரோடு பகுதியில் வந்தபோது, டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் 26 பேருக்கு, மகளிர் பெயர் அச்சிடப்பட்ட இலவச பயணச் சீட்டை கொடுத்து, நடத்துனர் நவீன்குமார், பணம் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நடத்துனரின் மோசடி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் கட்சி பிரிவுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டுமென மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் கந்துவாவில்செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உஷா தாகூர்: நண்பர்களே, நீங்கள் அனைவரும் செல்ஃபி எடுக்க விரும்புகின்றீர்கள் என எனக்கு தெரியும். இதற்கு மிகவும் நேரம் எடுக்கும், மேலும் எங்களுக்கு பல மணிநேரம் வீணாகிறது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இனி யார் செல்ஃபி எடுத்தாலும் 100 ரூபாயை கட்சியின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார். சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் பிஎம் கேர் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உஷா தாக்கூர்கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட்டின் பிரதான அணி இங்கிலாந்தில் உள்ள நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுகிறார். ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் இரண்டு தொடர்களில் விளையாடுவது இதுவே முதன்முறை. இரு அணிகளுக்கிடையிலான முதல் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாசா அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கைத் தேர்வு செய்ய 50 ஓவர் முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர்…
தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி இன்றோடு ஏழு வருடங்கள் ஆகியுள்ளதை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ், முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான படம், ’வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்து, நடித்தார். இது அவருக்கு 25 வது படம். இந்த படத்தில் அமலாபால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உட்பட பலர் நடிக்க படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷ் இன்ஜினியரிங் முடித்த வேலையில்லா பட்டதாரியாக நடித்திருப்பார். அவரின் எதார்த்தமான நடிப்பும் படத்தின் திரைக்கதையும் அதுவரை தமிழகத்தில் வேலையில்லாமல் பல்வேறு இடங்களில் அவமானப்பட்ட பட்டதாரி இளைஞர்களை காலரை தூக்கிவிட்டு விஐபி என்னும் அடைமொழியோடு அழைக்கும் வண்ணம் அமைந்தது. மேலும் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக அம்மா…
மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை பெய்த கன மழையினால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மும்பை நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியுள்ளன. வெள்ளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் தற்போது மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை விக்ரோலி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போது வரை செம்பூரின் பாரத் நகர் பகுதியில் 15 பேரும், விக்ரோலியின் சூர் நகர் பகுதியிலிருந்து 9 பேரும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, இதில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டித் தொடர் இந்தாண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் அடங்கிய அணி ஜப்பானை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கொரோனா கட்டுப்பாட்டு வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விடுதி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடதப்பட்டது. இதில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து முதல்முறையாக ஒட்டு மொத்த வீரர்களும் தங்கும் ஒலிம்பிக் கிராமத்திலேயே கொரோனா தொற்று ஊடுருவி இருப்பது…
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை, டெல்லி விமான நிலைய ஊழியர்கள் உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஜப்பானின் டோக்கியோவில் வரும் 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா 18 விளையாட்டுகளில் 68 பிரிவில் பங்கேற்கிறது. 71 வீரர்கள், 56 வீராங்கனைகள் என மொத்தம் 127 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு டோக்கியோ புறப்பட்டு சென்றனர். அப்போது, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் டெல்லி விமான நிலைய ஊழியர்கள், வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின்போது இனவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் சக வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய பரபரப்பு சம்பவம் அரேங்கேறியுள்ளது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளதுஇந்த போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி பயிற்சி ஆட்டத்தின்போது, ஜெர்மனி அணி ஹோண்டுராஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருந்த போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.அப்போது திடீரென ஜெர்மனி அணி வீரர்கள் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் பேசுபொருளானது இந்த சூழ்நிலையில் தாங்கள் ஏன் வெளியேறினோம் என்பதற்கான காரணத்தை கூறிய ஜெர்மனி அணி கூறியுள்ளது. அதாவது ,தங்கள் அணியைச் சேர்ந்த ஜோர்டன் டொரனாரிகா என்ற வீரர், இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் மைதானத்தை விட்டு ஜெர்மனி வீரர்கள் வெளியேறியதாக…
சானிடைசர் எவ்வளவு நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி விட்டது என்பதற்கு உதாரணமாக குழந்தை ஒன்றின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் சானிடைசர் பயன்பாடு கொரோனாவுக்கு முன், பின் என 2 வகைகளில் பிரிக்கும் அளவுக்கு நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது. இந்நிலையில் ஒரு வயது குழந்தை ஒன்று பார்க்கும் பொருட்களை எல்லாம் சானிடைசர் என நினைத்து அதன் முன் கைகளை நீட்டி துடைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.