- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகள் வெளியானதால் தாலிபான்கள் பல்வேறு மாகாணங்களை கைப்பற்றினர் தலைநகர் காபூலையும் கைப்பற்றி உள்ளனர். இதனால், அந்நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே காரணம் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாடியுள்ளார். கொரோனா அதிகரிப்பு, மெக்சிகோ எல்லைப் பிரச்சனை, பொருளாதார முடக்கம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பொறுப்பேற்று அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியா இங்கிலாந் இடையே கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் எடுத்தன பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 272 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 60 ஓவர்களில் இந்த ரன்னை எட்ட வேண்டும் என்பதால் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்க ஆசைப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 51.5 ஓவர்களில் அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிராஜ் 4…
ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள், மீட்பு பணிகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆப்கானில் தாலிபன்கள் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு உள்ள மக்கள் வெளியேறிவருகின்றனர்,இந்த நிலையில் இந்திய வெளியுறைவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட செய்தி குறிப்பில்: ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை மீட்பதில் இந்திய வெளியுறவுத்துறை தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அவர்களை மீட்பதே எங்களின் முதல் குறிக்கோள். முக்கியமாக ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் சீக்கியர்கள், இந்துக்களை மீட்க முக்கியத்துவம் தரப்படும். இப்போது பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து தொடங்கியதும் இவர்கள் மீட்கப்படுவார்கள். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் நபர்களுக்கு அதற்கான வசதி ஏற்படுத்தி தரப்படும். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நான் கவனமாக இருக்கிறோம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வரும் மக்களுக்கு உதவ தயார் என பிரான்ஸ் நாட்டின் அரசு தெரிவித்துள்ளது ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆக்கிரமித்ததால்அங்கிருந்து ஏராளமான பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டும் என ஐ.நா. தெரிவித்துள்ளது இந்த நிலையில் பிரான்ஸ் இதுகுறித்து தனது உறுதிமொழியை கொடுத்துள்ளது அதன்படி, ஆப்கன் மக்களுக்கு ஆதரவளிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதேபோல் மற்ற நாடும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகிறது
ஆப்கானிஸ்தான் இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என அழைக்கப்படும் தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பினர் அங்கு இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ள நிலையில் பலர் விமானத்தில் வெளிப்பக்கத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கும் தாலிபான் அமைப்பினர் அந்நாட்டின் பெயரை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என மாற்றியமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொற்கையில் நடந்த அகழாய்வில் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள், கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மட்பாண்ட பொருட்கள் போன்றவை இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் கொற்கையில் தொல்லியல் துறை இயக்குனர் தங்கத்துரை, அலுவலர் ஆசைத்தம்பி உள்ளிட்ட குழுவினர் அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அங்கு 9 அடுக்கு கொண்ட சுடுமண் குழாய், பல அடுக்கு செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம், சங்காலான அலங்கார மோதிரங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாரமங்கலத்தில் தோண்டப்பட்ட குழியில் வெளிநாட்டைச் சேர்ந்த பழங்கால செம்பு நாணயம், அலுமினிய நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏற்கனவே கண்டறியப்பட்ட பல அடுக்கு செங்கல் கட்டுமானத்தின் அருகில் சுமார் 3 அடி உயர மட்பாண்ட கொள்கலனும் கிடைத்துள்ளது. மேலும் பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும், துறைமுக…
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமானத்தில் தொங்கியபடி மக்கள் செல்லும் காட்சிகள் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகளும், அமெரிக்கப் படைகளும் வெளியேறத் தொடங்கியபின் தாலிபான்கள் பல்வேறு மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி வந்த நிலையில் நேற்று தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.இந்நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். விமானங்கள் அனைத்திலும் முந்திக்கொண்டு ஏறுவதால் நிலைமை கை மீறியுள்ளது. இதனையடுத்து அங்கு மக்கள் மீது இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர். இதனிடையே காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் இடம் கிடைக்காததால் வெளிபுறத்தில் ஏறிக்கொண்டனர். ஆனால் விமானம் வானில் புறப்பட்டு சென்ற போது அதன் சக்கரத்தில் தொங்கிக் கொண்டு சென்ற 3 பேர் மேலிருந்து கீழே விழும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலில் முதல் முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்ககொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலில் முதல் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா 28 என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிறந்து வளர்ந்த சுஹாஞ்சனா 2019 செப்டம்பரில் சென்னை கிண்டியில் டிசைன் இன்ஜினியராக வேலை செய்யும் கோபிநாத் 31 என்பவரை திருமணம் செய்தார். சேலையூர் பகுதியில் வசித்து வரும் இவர் தேவாரம், திருவாசகம் இரண்டையும்…
நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது நிறைய இடைவெளி இருப்பதாக நடந்த 75வது சுதந்திர தின விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார் சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடத்தாதது மிகவும் கவலை அளிப்பதாக கூறினார். மேலும், இது போன்று கொண்டு வரக்கூடிய சட்டங்களில் போதுமான தெளிவுகள் இல்லை என கூறிய தலமை நீதிபதி ,முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் குறித்து விரிவான மற்றும் ஆழமான விவாதங்கள் நடைபெறும்.ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் விவாதமின்றி கொண்டு வரப்படும் சட்டங்களின் நோக்கத்தை நீதிமன்றத்தால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என கூறிய நீதிபதி. ஏன் இத்தைகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் வழக்கறிஞர்கள் பணத்தை மட்டுமே…
நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்படுமா இல்லையா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாதுஎன்று எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலை குறித்த கேள்விகள், தொடர்ந்து வலம் வரும் நிலையில் இது குறித்து டில்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா நாட்டில் கொரோனா வைரசின் மூன்றாம் அலை ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவதாக கூறினார். அதே சமயம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றா விட்டால் மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும் ஆனால் இப்போதைக்கு மூன்றாம் அலை ஏற்படுமா, இல்லையா என்பதை கணிக்க முடியாது என கூறியுள்ளார் ஒரு வேளை கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அப்போது குழந்தைகள்அதிகம் பாதிக்கப்படலாம் என கூறியுள்ளார் மேலும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் நமக்கு கிடைத்துவிடும் என அவர் கூறியுள்ளார்.