Author: Admin

அக்டோபரில் தொடங்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 24 ஆம் தேதி மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவுள்ளன. உலகக்கோப்பைப் போட்டிகளுக்கான பிரதான சுற்றின் இரண்டாம் பிரிவில், இந்தியா,பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும் இதே பிரிவில் இடம்பெறும்.இதில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஒன்று நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடைபெறவுள்ளது. அதன்படி அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆப்கானிஸ்தனை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தன்னை கொல்வதற்காக காத்திருப்பதாக அந்நாட்டின் முதல் பெண் மேயர் கூறியுள்ளது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை வேகமாக தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய தினம் காபூலில் உள்ள அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர். பெண்களை அடிமைகளாக கருதும் தலிபான்களின் ஆட்சியில் மக்கள் இருப்பின் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்க நேரிடும் என உலக தலைவர்கள் பலரும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயரான ஜரிஃபா கஃபாரி கூறியுள்ளது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தலிபான்கள் தன்னை வந்து கொல்வதற்காக காத்திருக்கிறேன், தான் எங்கும் ஓடி ஒளியவில்லை, இங்கே தன்னுடைய கணவருடன் உட்கார்ந்திருக்கிறேன் என கூறியுள்ளார். என்னை காப்பாற்ற என் குடும்பம் அருகில் இல்லை, என்னை போன்றவர்களை தான் தலிபான்கள் முதலில் கொல்வர் எனவும், தன்னுடைய மரணத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் பேசியுள்ளார். 27 வயதான ஜரிஃபா கஃபாரி ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயராக கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது…

Read More

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 49 இடங்களில் மக்கள் இலவசமாக WiFiவசதியை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரிப்பன் கட்டிட வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திலிருந்த படியே, இணைய வழி சாதனங்களை பயன்படுத்தி, அதிகாரிகள் மாநகரை கண்காணிக்கவும், பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்களை அறியவும், அவசர காலத்தில் கட்டுப்பாடு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் வாயிலாக பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக WiFi சேவை வழங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிவசங்கர் பாபா மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த 3 போக்சோ வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில், 2 போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று 3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா-வை கைது செய்த சிபிசிஐடி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களில் சிபிசிஐடி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம்…

Read More

கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்ந்து 877 ரூபாய்க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 710 ரூபாய்க்கு விற்பனையானது. இவ்வாறு படிப்படியாக உயர்ந்த சிலிண்டர் விலை மார்ச் மாத தொடக்கத்தில் 835 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, சிலிண்டர் விலை 835லிருந்து 10 ரூபாய் குறைக்கப்பட்டு, 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிலிருந்து மூன்று…

Read More

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கனி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததால்அதிபர் அஷ்ரப் கானி, நாட்டை விட்டு வெளியேறுமாறு என கூறப்பட்டது. நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக்கொண்டு, ஹெலிகாப்டரிலும் பணக் கட்டுகளுடன் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக, ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்தபோது, அவர்களது தாக்குதலை சமாளிக்க முடியாது எனத் தெரிந்ததும், அங்கிருந்து அவர் தப்பியுள்ளார். ஓமனுக்கு அஷ்ரப் கனி தப்பிச் சென்றதாகவும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அஷ்ரப் கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும், அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர் இந்த நிலையில்காபூலைவிட்டு வெளியேறிய பின்பு அதிபா் அஷ்ரஃப் கனி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள முதல் பதிவில், ஆயுதங்களுடன் தலிபான்கள் அதிபா் மாளிகைக்குள் நுழைய வேண்டும் அல்லது…

Read More

முன்னாள் அமைச்சர் வேலுமணி அமைச்சராக இருந்த போது அரசு டெண்டர்களை எடுத்த அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவது நடந்து வருகிறது. அந்த வகையில்முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்புலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்சோதனை நடத்தினர். இந்த நிலையில் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான வெற்றிவேலுக்கு சொந்தமான சென்னை எம்ஜிஆர் நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 11.8 லட்சம் பணமும் ஆவணங்களும் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளதுஇந்த நிலையில் தற்போது வெற்றிவேலின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே வெற்றிவேலின் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது அவரது தந்தையின் வீட்டிலும் சோதனை…

Read More

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமாகியுள்ளார். சன் மியூசிக் தொடங்கிய காலத்தில் 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்ததொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்த ஆனந்த கண்ணன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நடித்திருந்தார் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆனந்த கண்ணன் கடந்த சில நாட்களாகவேபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் வெங்கட் பிரபு அவரது மறைவு குறித்து தனது ட்விட்டர் பதிவில்: “சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

தாலிபான்களுடன் சீனா பேச்சு வார்த்தை நடத்த தயார் என்பது இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம்எல்ஐசியை தனியார் மயமாக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு தமிழகத்தின் பொருளாதாரத்தை தொலைத்து விட்டதாகவும் அதைத்தான் திமுக வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக கூறினார். மேலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தமிழக அரசு திகழ்வதாக கூறிய கார்த்திக் சிதம்பரம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தது இந்தியாவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என கூறினார். மேலும், ஆப்கானில் தாலிபான் அதிகாரம் செலுத்தும் போது இந்தியாவில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இந்தியாவிற்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் வரும். பாகிஸ்தானை கூட தாலிபான்கள் கைப்பற்றும் என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக கூறினார்.

Read More

ஆப்கானில் அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டு இருக்க முடியாது, என்னோடு இந்த போர் முடிவிற்கு வரட்டும்,என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் இன்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆப்கானில் கடந்த 20 வருடமாக இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஆப்கான் அதிபர் அப்சர் கானி பதவி விளக்கினார். தாலிபான்களின் இந்த வெற்றிக்கு அமெரிக்கா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அமெரிக்க படைகளை அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியேற்றிய விவகாரம் கடும் விமர்சனங்களை உள்ளாகியது. ஜோபைடனின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தான் என்றும் இது அமெரிக்க வரலாற்று தோல்வி எனக் கூறிய டிரம்ப். அமெரிக்காவின் இந்த செயல்காலம் முழுவதும் பேசப்படும். இதற்கு பொறுப்பேற்று அமெரிக்க அதிபர் பதவியை அதிபர் ஜோ பைடன்…

Read More