- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைக்கு இணங்க டுவிட்டர் தரப்பில் கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில், சமூக வலைத்தளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய டிஜிட்டல் கொள்கையை விதித்து, அதற்கு இணங்கும்படி மத்திய அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியது. இதைத்தொடர்ந்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்தாலும், பயனாளர்களின் தனிஉரிமை பறிக்கப்படுவதாக டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.டுவிட்டருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, கடந்த வாரம் இறுதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், புதிய விதிகளுக்கு கீழ்ப்படிவதாக டுவிட்டர் தெரிவித்தது. மேலும் கொரோனா சூழல் காரணமாக இறுதி முடிவினை எடுக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் டுவிட்டர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.- மூவேந்தன்
பயனாளர்களின் சுதந்திரத்தை பறிக்கும் விதமாக கூகுள் செயல்படுகிறது என புகார் தெரிவித்து கூகுள் நிறுவனத்திற்கு பிரான்ஸ் அரசு 22 கோடி யூரோ அபாராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய ஊடகங்களான நியூஸ் கார், பிரஞ்சு டெய்லி பெல்ஜியம், குரூப் ரசல் ஆகியவை கூகுள் மீது புகார் தெரிவித்தன. அதில், விளம்பரங்கள் மூலமாக தங்கள் ஆன்லைன் தளங்களை கூகுள் நிறுவனம் தொந்தரவு செய்வதாகவும் வாடிக்கையாளர்களுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கூகுள் தேடுதளத்தில் நாம் ஒரு ஆன்லைன் வர்த்தகப் பொருள் குறித்த தேடினால் அந்தப் பொருள் நாம் செல்லும் இடமெல்லாம் பின்தொடரும் என்பது நாம் அறிந்த ஒன்றே. இதையடுத்து, பிரான்ஸ் நாட்டின் இணைய கட்டுப்பாட்டு அமைப்பு இதனை சோதனை செய்து கூகுளுக்கு 22 கோடி யூரோ அபராதம் விதித்துள்ளது.- மூவேந்தன்
தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், காய்கறிகள்,மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ரேஷன் கடைகளும் கீழக்காணும் பணி நேரத்தின்படி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 8 ஆம் தேதி முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த நேரம் மாற்றம் அமலுக்கு வருவதாகவும், இது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நிவாரண நிதி இரண்டாம்…
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் போட்டி நடத்தப்படும் என்பது முடிவாகாத நிலையில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி ஒருநாள் போட்டிகளில் முதல் ஆட்டம் ஜூலை 13 ஆம் தேதியும், 2-வது ஆட்டம் ஜூலை 16 ஆம் தேதியும், 3-வது ஆட்டம் ஜூலை 18 ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிவடைகிறது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதால் இலங்கை தொடருக்கு இளம் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடரின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு தற்போதைய தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே அமைந்துள்ளதால், அவற்றை அனைவருக்கும் செலுத்தும் பணியில் மத்திய,மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஸ்புட்னிக் வி உள்ளிட்ட சில தடுப்பூசிகளும் அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு வர உள்ளன. டாக்டர் ஏ.கே.சிங் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காக 515 சுகாதார ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மூவேந்தன்
‘‘நீட் தேர்வு எனும் அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ – ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் கே.எஸ். அழகிரி
அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் அநீதி நடைபெறுகிறது. புள்ளிவிவரங்களின் படி, கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்லூரியில் சாதித்துள்ளனர் ஆனால் அவர்களுக்கு நீட் தேர்வினால் அநீதி அதிகரித்துள்ளது. இதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டும் அரசுப் பள்ளியில் படிக்க 405 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஆகவே இது போன்ற அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அநீதியை போக்குவதற்கான முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு மாற்றாக வேறு எந்த வகையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து அரசு…
டெல்லியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றன. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை அமல்படுத்தினார்.தற்போது டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இன்று தளர்வுகளை அறிவித்தார். மேலும், டெல்லியில் இருக்கும் மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருவதில்லை. இதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் வீடு வீடாக சென்று அதிகாரிகள் தடுப்பூசி பணியை மேற்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த பணி இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த வதந்தியை போக்கும் விதத்தில் விழிப்புணர்வுகளை…
கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். தற்போது கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பிரதமர் கூறியது என்ன? பிரதமரின் உரையாடல் சுருக்கம்: கொரோனா பெருந்தொற்றால் நமக்கு பிரியமான பலரை இழந்துள்ளோம். கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்த நவீன உலகம், இது போன்ற கொரோனா பெருந்தொற்றை கண்டதில்லை {நன்றி ani} ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தன. ரயில்கள், விமானங்கள், மூலம் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஆக்சிஜன் தேவைக்காக பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தினோம். மனித குலத்தின் பெரும் எதிரி கொரோனா அதனை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை எதிர்த்துப் போராட தடுப்பூசி தான் உதவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை…
வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்ததாக தனது பயனாளர்களுக்கு 3 புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ்அப் செயலியில் விரைவில் மூன்று புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என்பதை தெரிவித்திருந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த உரையாடல்களை தானாக அழியும் disappearing வசதியை எல்லா உரையாடல்களிலும் பயன்படுத்தும் விதமாகவும், நீங்கள் ஒருவருக்கு தகவல் அனுப்புவதற்கு முன் அதனை சரிபார்க்க “view once” வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. மூன்றாவதாக multi device எனப்படும் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இயங்கும் வண்ணம் அந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வாட்ஸ்அப் பீட்டா வழியாக iOS பயனர்களுக்கு இது கிடைக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவாடு மீன் ஆனாலும் அதிமுகவை சசிகலா கைப்பற்ற முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா தொண்டர்களுடன் போனில் பேசும் ஆடியோ வெளியாகி கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே விழுப்புரத்தில் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்தவர் அவ்வளவு தான் என்றும் ஆவேசமாக கூறினார். மேலும் கருவாடு மீன் ஆனாலும் அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது எனவும் அவர் கூறினார். மூவேந்தன்