வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

SHARE

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் சென்ற நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

நடிகரும்,தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தேமுதிக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அவர் தவிர்த்து வந்தார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட தன்னை யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டு சிகிச்சையை தவிர்த்து வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளை செய்து வந்தார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை விஜயகாந்த் விமானம் மூலம் துபாய் சென்றார். விமான நிலையத்தில் அவரை உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து வேகமாக தள்ளிக் கொண்டே சென்ற புகைப்படங்கள் தேமுதிக தொண்டர்கள் உட்பட தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

திமுக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்.. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு!

Admin

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்சோ சட்டத்தில் கைது!

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

Leave a Comment