ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

SHARE

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின்போது இனவெறி தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் சக வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய பரபரப்பு சம்பவம் அரேங்கேறியுள்ளது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளதுஇந்த போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டி பயிற்சி ஆட்டத்தின்போது, ஜெர்மனி அணி ஹோண்டுராஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருந்த போது இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன.அப்போது திடீரென ஜெர்மனி அணி வீரர்கள் திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் பேசுபொருளானது

இந்த சூழ்நிலையில் தாங்கள் ஏன் வெளியேறினோம் என்பதற்கான காரணத்தை கூறிய ஜெர்மனி அணி கூறியுள்ளது.

அதாவது ,தங்கள் அணியைச் சேர்ந்த ஜோர்டன் டொரனாரிகா என்ற வீரர், இனவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் மைதானத்தை விட்டு ஜெர்மனி வீரர்கள் வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஒலிம்பிக் நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வலுத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள், இனவெறி தாக்குதலுக்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட் போட்டி ரத்து ? – சர்ச்சையில் சிக்கிய இந்திய அணி

Admin

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

ரொனால்டோவுக்கு கோகோ கோலா … இவருக்கு பீர் பாட்டில்…யூரோ கோப்பையில் தொடரும் சர்ச்சை

Admin

தமிழகத்தில் புதிதாக 4 மாநராட்சிகள்…

Admin

தோல்வியும் இல்லை… விக்கெட்டும் இல்லை… தொடர் வெற்றியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்… சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா…

Admin

Leave a Comment