தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

SHARE

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் அனுப்பிய சுற்றறிக்கையில், ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் தாக்கம் அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் , மக்கள் கூடும் இடங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில மாவட்டங்களில் வழக்கமானதை விட குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும், கடந்த இரு நாள்களை விட அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புக்கு காரணம் என்ன, எந்த இடத்தில் இருந்து கொரோனா பாதிப்பு அதிகமாக பரவுகிறது என்பன குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஆட்சியா்கள் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காய்ச்சல் முகாம்களைத் தொடா்ந்து நடத்துவதையும், குறைந்தபட்சம் அதில் 100 பேரையாவது பங்கேற்க வைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

Admin

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

Admin

முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம் தொடக்கம்!

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

Leave a Comment