இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

SHARE

பி.எம்.கேர் நிதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 கொரோனா 2ஆவது அலை நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மத்திய அரசின் பி.எம்.கேர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு பல மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் பழுது காரணமாக இயங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. 

பி.எம்.கேர் நிதியில் இருந்து முதற்கட்டமாக 262 வெண்டிலேட்டர்கள், இரண்டாவது கட்டமாக 590 வெண்டிலேட்டர்கள் என 1352 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்ட நிலையில், 862 வெண்டிலேட்டர்கள் மட்டுமே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுபோல முன்னதாக பஞ்சாப் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட 320 வெண்டிலேட்டர்களில் குறைந்தது 237 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்று அங்குள்ள 3 மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வெண்டிலேட்டர்கள் சரி செய்யப்பட்டாலும் அவற்றை நம்பிப் பயன்படுத்த முடியுமா எனத் தெரியவில்லை என்றும் பல மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் உயிரோடு விளையாடுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த மே 15 அன்று பிரதமர் மோடி, மத்திய அரசு அனுப்பிய வெண்டிலேட்டர்களை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்துகின்றனவா?-என்று ஆய்வு செய்யக் குழுவை அனுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

விசிக துணை பொதுசெயலாளர் வீட்டில் ED ரெய்டு… ஏன்?

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

துரோகம் என்பதை அன்றே குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன்: மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம்!

Admin

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

Leave a Comment