15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

SHARE

உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பை சந்தித்து உள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் உள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 நாடுகளாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

நேற்றுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் இதுவரை கொரோனா தொற்றால் 15 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 915 நபர்கள் குணமடைந்து உள்ளனர். கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 6 ஆயிரத்து 229 ஆகும். ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 153 நபர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையின் பரவல் முதல் அலையின் பரவலை விட அதிகமாக உள்ளது. சிறுவர்களும் குழந்தைகளும்கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கொரோனா மீது சிறிதும் அலட்சியம் காட்டாமல் மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்ப்போம். முகக் கவசம், கை தூய்மை ஆகியவற்றைப் பின்பற்றுவோம். கொரோனாவில் இருந்து விலகி நிற்போம்.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

ஜப்பானிய மொழி பெயர்ப்பு நூல் ‘பூனைகள் நகரம்’ – மதிப்புரை.

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

ஒரு டுவிட்டர் பதிவின் விலை 18 கோடி ரூபாய்!.

Admin

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு லட்சம் நிவாரண நிதி: அமெரிக்கா அளிக்க உள்ளது

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

வெடித்த மேகன் மார்கல்… விளக்கம் கொடுக்கும் இங்கிலாந்து ராணி… நடந்தது என்ன?

Admin

Leave a Comment